.....உதட்டு சாயம் பூசும் என் காதலிக்கு.....


உன் செவ்விதழ் கிண்ணத்தில்
புன்னகை தேன்
பொங்கி வழிய கண்டேன்.
பசியில் திண்டாடி - உனை
பருக ஒரு
வண்டாக வடிவம் கொண்டேன்.
ஈர்ப்பு விசை ஆதிகம் உள்ள
இதழின் மேலே - என்
முத்தத்தை முதலீடு
செய்ய வந்தேன்.
ஆனால்
செயற்கை சாயம் பூசியிருந்த - உன்
செவ்விதழ் கண்டு
நஞ்சு தேய்த்த
அம்பு கொண்டு
நெஞ்சம் தைதிட்டதுபோல்
நொந்தேன்.
பேரழகு கொண்ட
பெண்ணே !
உன்
மலர் இதழின்
மகரந்த வாசனைக்கு தான்
மயங்கிகிடந்தேன்.
அதில் தெளிக்க பட்ட
மை வாடைக்கு அல்ல.

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்