Posts

Showing posts from February, 2013

இப்படிக்கு

Image
ஊர் ஊராக ஓடி சேர்த்து வைத்திருக்கிறேன் உதவும் கரங்களை... என்ன பயன் ? உன் இடத்தை நிரப்பும் தகுதி எந்த சக்திக்கும் இல்லை என்கிறபோது.. எவ்வளவோ தடுத்தும் கேட்க்கால் உடைத்து வெளியேறுகிறது கண்ணீர். என் அழுகை ஆசிட் பாட்டிலோடு அலையும் ஆண்களை என்ன செய்துவிடும் ? வலியுடன் தான் எழுதுகிறேன்... மார்பில் அடித்து அடித்து கதறியழும் உன் அப்பாவுக்கு என்ன ஆறுதல் தந்துவிடபோகிறது  என் எழுத்து ? நொறுங்கி போய்தான் இருக்கிறேன்.... அதை வெளிப்படுத்த அவசியப்படுகிறது ஒரு பதிவு. உயிர் இழந்த உனக்கும் உன்னை இழந்த உன் உறவுகளுக்கும் இந்த பதிவு என்ன செய்துவிடும் என்றுதான் தெரியவில்லை....... ---- இப்படிக்கு---- ஒன்றுக்கும் உபயோகம் இல்லாதவன் தமிழ்தாசன்... 12.02.2013 (தங்கை வினோதினியின் மரம் செய்தியறிந்து அழுதது) 

அரக்கனை அனுமதியோம்

Image
----- அரக்கனை அனுமதியோம் ---- என் தாய் நாடே நீ யார் பக்கம் ? ராமருக்காக மதசார்பற்ற மண்ணில் மசூதியை இடிக்கிறாய் ? ராவணனுக்கு  உன் ராணுவத்தை கொடுக்கிறாய் ? நீ யார் பக்கம்? கூட்டு சேரா நாட்டின் குணம் இதுதானோ ? இலங்கை தள இந்து கோவில்களை இடித்தவர் இந்தியா வருகிறார். சாமி கும்பிட காதில் பூ வைத்தவன் கேட்டு நம்பிட.. தொப்புள் கொடி எரித்தவனை தோழனாக தொழுது வணங்குகிறது எங்கள் அரசு. கருப்பு கொடி ஏந்தி கண்டிக்கும் எங்களை கண்டு சிரிக்கிறது சிங்கள அரசு. தமிழின உணர்வை இலக்கியத்தைவிட எங்களுக்கு இலங்கைதான் புகுத்தியது. கோசம் போட்டு நாங்கள் கேட்டு எழுந்தது தமிழின விடுதலையை நாசம் செய்யும் கூட்டம் நடத்தி முடித்து தமிழின படுகொலையை மரித்த மைந்தர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்துகிறோம் நீயோ எங்களை ஊமையென்று உத்தேசிக்கிறாய்.. ஏழுகோடியும் எழுந்து நின்று மூச்சு தேய கர்ஜிக்கிறோம் நீயோ கூச்சலென்று குறிப்பெழுதுகிறாய் நடந்ததை காட்டி நியாம் கேட்கிறேன். நீயோ பழங்கதை பேசி பழி தீர்க்கிறாய்.... உயிர் தப்பிய உறவுகள் ஊனமாய் பிணைகைதியாய் விதவையாய் வேசியாய் அனாத