இப்படிக்கு
ஊர் ஊராக ஓடி சேர்த்து வைத்திருக்கிறேன் உதவும் கரங்களை... என்ன பயன் ? உன் இடத்தை நிரப்பும் தகுதி எந்த சக்திக்கும் இல்லை என்கிறபோது.. எவ்வளவோ தடுத்தும் கேட்க்கால் உடைத்து வெளியேறுகிறது கண்ணீர். என் அழுகை ஆசிட் பாட்டிலோடு அலையும் ஆண்களை என்ன செய்துவிடும் ? வலியுடன் தான் எழுதுகிறேன்... மார்பில் அடித்து அடித்து கதறியழும் உன் அப்பாவுக்கு என்ன ஆறுதல் தந்துவிடபோகிறது என் எழுத்து ? நொறுங்கி போய்தான் இருக்கிறேன்.... அதை வெளிப்படுத்த அவசியப்படுகிறது ஒரு பதிவு. உயிர் இழந்த உனக்கும் உன்னை இழந்த உன் உறவுகளுக்கும் இந்த பதிவு என்ன செய்துவிடும் என்றுதான் தெரியவில்லை....... ---- இப்படிக்கு---- ஒன்றுக்கும் உபயோகம் இல்லாதவன் தமிழ்தாசன்... 12.02.2013 (தங்கை வினோதினியின் மரம் செய்தியறிந்து அழுதது)