Posts

Showing posts from April, 2026

அணைபூதம் (எ) புத்தர்

Image
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், எல்லப்பட்டியில் சுருளியாற்றின் குறுக்கே வெள்ளையர்கள் (John Pennycuick) காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணை ஒன்று உள்ளது. அணையின் மேற்கு கரையில் மரத்தடியில் ஏழு கன்னிமார் கோயிலும், ஆற்றினுள்ளே தலையில்லா புத்தர் சிலையும் காணப்படுகிறது. அணைபூதம் (எ) புத்தர்: ஆற்றின் கரையோரமாக ஒரு மரத்தின் அடியில் புத்தர் சிலை இருந்ததாகவும், ஆங்கிலேயர் காலத்தில் சுருளியாற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் புத்தர் சிலை அடித்து செல்லப்பட்டதாகவும், அன்றிலிருந்து தலை சிதைந்த நிலையில் ஆற்றினுள் நடுவில் புத்தர் சிலை இருப்பதாகவும் புத்தர் சிலை குறித்து ஊர் மக்களிடம் கதைகள், நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னால் புத்தரின் தலை குச்சனூர் அருகே ஆற்றில் கிடப்பதை மக்கள் பார்த்ததாக சொல்லப்படுகிறது. எல்லப்பட்டியில் அரிசிக்கடை வைத்திருக்கும் 70 வயது மதிக்கத்தக்க ஊர் பெரியவர், தாம் பிறப்பதற்கு முன்பிருந்தே தலையற்ற புத்தர் சிலை ஆற்றினுள் இருப்பதாக தெரிவித்தார். இப்புத்தரை அணபூதம் (அணை பூதம்) என்று மக்கள் வழிபடுகின்றனர் என்று தெரிவித்தார். சமணர் Vs புத்தர் சிலை வேறுபாடு: சமண தீர்த்...