Posts

Showing posts from June, 2014

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்

Image
நாணல் நண்பர்கள் குழு ஒருங்கிணைக்கும் 3வது "நம்ம வரலாறு" நிகழ்வு கடந்த 15.06.2014 ஞாயிறு, மாலை 4.30 மணிக்கு மதுரை பாண்டி முனீஸ்வரன் கோவிலில் நடந்தது. இம்முறை நம்ம வரலாறு நிகழ்வில் "நாட்டார் தெய்வங்கள்" குறித்து எடுத்துரைக்கபட்டது. நம்ம வரல ாறு நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு. சா. கான்சா சாதிக் மற்றும் சே. ஸ்ரீதர் நெடுஞ்செழியன் மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்கள். நாட்டார் தெய்வமான பாண்டிக் முனீஸ்வரன் கோவில் இடத்தை நாட்டார் தெய்வங்கள் குறித்து பேச தேர்வு செய்ததில் இருந்தே புரிந்துக் கொள்ளலாம். நாற்பது வருடங்களாக நாட்டார் வழக்குகள், நாட்டுபுற இசை, தமிழிசை ஆராய்ச்சிக்கென தன் வாழ்வை அர்பணித்த தமிழிசை அறிஞர் திரு. மம்மது அவர்களை நிகழ்வின் சிறப்பு பேச்சாளாராக அழைத்து கூடுதல் சிறப்பு. தாது மணல் கொள்ளை, அணு உலைக்கு எதிராக போராடி வரும் தோழர். முகிலன், வானகத்தில் இருந்து வெற்றிமாறன், மே 17 இயக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன், இயற்கை ஆர்வலர் திரு. சுந்தர கிருஷ்ணன், சுற்றுலா வழிகாட்டி திரு. சிவ குருநாதன், சமூக ஆர்வலர்கள் திரு. வ

வானூர்தியும் வண்ண பறவைகளும்

Image
வானூர்தி (Aeroplane) தரையிரங்குவதையும் மேலேறுதையும்  வேடிக்கை பார்க்க, மதுரை - அருப்புகோட்டை சாலையில் எப்போதுமே மக்கள் கூட்டம் திரண்டு இருப்பதை அந்த பக்கம் போகிறவர்கள் பார்க்க முடியும்.  பனிக்கூழ் (Ice Cream) வண்டியும் அதன் பக்கத்தில் பனிக்கூழ் வேண்டி சிறுவர்கள் பெற்றோரிடம் அடம்பிடிக்கும் காட்சியையும் பார்க்கலாம். வேடிக்கை பார்க்கிற மக்கள் திரளில் என்றாவது நாமும் ஒருவராக இருந்திருப்போம். காரணம் வேடிக்கை நம் தேசிய குணமாகியிருக்கிறது. தரையிறங்கும் வானூர்தி எந்த நிறுவனத்தை சேர்ந்தது, எங்கே செல்கிறது, எங்கிருந்து வருகிறது என்று தன் பிள்ளைகளுக்கு அத்தனை ஆசையோடு எடுத்து சொல்லும் பெற்றோர்களை நான் பார்த்திருக்கிறேன். வானூர்தியை பார்க்கிற மக்களின் உற்சாக ஆசையால் பனிக்கூழ் விற்கும் தொழிலாளி பயனடைகிறார் என்கிற செய்தி நமக்கு மகிழ்ச்சி தருகிறது. Times Of India 02.06.2014 அதே வழியில் மண்டேலா நகருக்கு அருகில் சாலையின்  இருபுறமும் அமைந்துள்ள கிளாக்குளம் கண்மாய்க்கு கூட்டம் கூட்டமாக சிறகடித்து வருகின்றன பறவைகள் பல. என்றாவது ஒருநாள் அவ்விடத்தில் நின்று அந்த பறவைகளை இனம் காண மு