என் காதல் கவிதைகள் சில
----என் காதல் கவிதைகள் சில---- * சிகரெட் புகையும் உன் சிறு பார்வையும் என் நுரையீரல் வரை நுழைந்துவிட்டு வருகிறது... *குளத்தில் நீ குளிப்பதை பார்த்து குழம்பிப் போன இளசுகள் எல்லாம் ஊருக்குள் ஒரு வதந்தியை பரப்பிவிட்டது... "ஒரு தாமரை மட்டும் தாவணி கட்டி இருக்கிறது" என்று.. *திருவிழாத் தேர் உன் வீதியில் வலம் வருகிறது. நீயோ தேர் இழுப்பதை வேடிக்கை பார்க்கிறாய். தேரை இழுப்பவர்களெல்லாம் உன்னையே வேடிக்கை பார்கிறர்கள். *தென்றல் தழுவினால் கூட தேகம் கீறல் படும் மெல்லிய ஸ்பரிசம் உன்னது.. *பேச்சு போட்டியைப் போல் மௌனப் போட்டி எங்காவது நடந்தால் சொல்லுங்கள். அதில் கலந்து கொள்ள ஒரு காதலி இருக்கிறாள் எனக்கு. *வாழைத்தோப்பு வரப்போரம் நீ நடந்து வந்தால் வாழைப் பூக்கூட வயசுக்கு வந்துவிடும்.. *ஏய் கருவாச்சி நீ பவுடர் பூசுகிறபோது உன் முகம் வெளுத்துப் போகிறது. பாவம் பவுடர் கருத்து போகிறது. *உன் வீட்டில் கிளி நீ வளர்க்கிறாயாமே? ஏற்க்கனவே உன் அம்மா வீட்டில் மயில் வளர்கிறாளே அது போதாத? *அன்பே! வெற்றியில் கிடைக்கும் பரிசுகளை விட தோல்வியில் கிடைக்கும் உன்