நான் எழுதிய ஹைக்கூ சில

....நான் எழுதிய ஹைக்கூ சில....

* பணக்காரன் ஆகிவிட்டான் பாகன்
இன்னும் பிச்சையெடுக்கிறது
யானை..

* ஆணி குத்திய கால்களுடன்
செருப்பு தைக்கும் சிறுவன்..

* ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும்
முத்தமிட ஒரு குழந்தைகூட இல்லை
முதியோர் இல்லத்தில்..

* அழைத்த குரலுக்கு ஓடி வர
ஆள் இல்லாத நெடுஞ்சாலை விபத்தில்,
உயிருக்கு போராடி இருந்து கிடந்தார்
ஆம்புலன்ஸ் டிரைவர்.


* எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து
எதிர் கட்சியினர் எரித்துவிட்டனர்
ஏழை குடிசைகளை.

* குங்குமம் வர இதழை
விரும்பி படிக்கும் வாசகி
விதவையானாள்.

*பட்டினி சாவை எதிர்த்து
ஊர் மக்கள்
இன்று உண்ணாவிரதம்.

* அதிக வலிஎடுக்கிற போது
அம்மா என்று கத்திவிடுகிறது
அனாதை குழந்தை.

----தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்