Posts

Showing posts from May, 2026

கண்ணகி கோயில்

கண்ணகி கோயில்  நெடுவேள் குன்றம்: மதுரையை எறித்த கண்ணகி, வைகையின் ஒரு கரையில் நடந்து சென்று சேர நாட்டில் உள்ள நெடுவேல் குன்றம் மலைமீது ஏறி வேங்கை மரத்தடியில் வருந்தி நின்ற காட்சியையும், பதினான்கு நாட்களுக்குப் பிறகு, கோவலன் விண்ணுலக தேவர்களுடன் புஷ்பக விமானத்தில் வந்து, கண்ணகிக்கு மீண்டும் மங்கல நாண் கட்டி, அழைத்துச் செல்கிறான் என்று இளங்கோவடிகள் பாடுகிறார்.   உரவு நீர் வையை ஒரு கரை கொண்டு ஆங்கு  அவல என்னாள் அவலித்து இழிதலின் மிசைய என்னாள் மிசை வைத்து ஏறலின் கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு அவுணரை கடந்த சுடர் இலை நெடு வேல் நெடு வேள் குன்றம் அடி வைத்து ஏறி  பூத்த வேங்கை பொங்கர் கீழ் ஓர் தீ தொழில்_ஆட்டியேன் யான் என்று ஏங்கி எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின் தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி பீடு கெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி  வாடா மா மலர் மாரி பெய்து ஆங்கு அமரர்க்கு அரசன் தமர் வந்து ஏத்த கோ_நகர் பிழைத்த கோவலன்-தன்னொடு வான ஊர்தி ஏறினள்-மாதோ - சிலம்பு மதுரை காண்டம் 23  185 - 199) இளங்கோவடிகள் குறிப்பிடும் நெடுவேல் குன்றம், கண்ணகி கோயில் அமைந்த...