Posts

Showing posts from May, 2013

அதட்டுகிற அப்பாவுக்கு

Image
மழலை வயதில் மண் தின்றேன்... தடுத்தெனுக்கு தாய்ப் பால் தந்தீர். பள்ளி பருவத்தில் பென்சில் திருடினேன்... பொறுத்து கொண்டீர். பெண்கள் மீது இச்சை கொண்டு பேரானந்தம் அடைந்தேன்... பதின் பருவம் பரவயில்லை என்றீர். கல்லூரி வகுப்புகள் புறக்கணித்து காலை மதியம் திரையரங்கு புகுந்தேன்... தெரிந்தும் தெரியாமல் இருந்தீர். நடுநிசியில் கதவை தட்டுகிறபோது மாதம் இருமுறை மதுபான வாடை என் மீது... சரி போகட்டும் என்று சகித்து கொண்டீர். யாரோ ஒரு நடிகர் சுவரோட்டியுடன் ராத்திரி புறப்பட்டேன்... "பத்திரமா வாப்பா" பாசம் பொழிந்தீர். பட்டதாரி ஆகியும் பணிக்கு செல்லாமல் ஊதாரியாக பொழுதுகள் வீணடித்தேன்... மூன்று வேளையும் உணவளித்தீர். செருப்பு தைக்கும் சிறுவனை பள்ளிக்கு சேர்க்க முயற்சித்தேன்... "உனக்கெதுக்குப்ப இந்த வேல" அதட்ட ஆரம்பித்தீர். இரவெல்லாம் விழித்து சேகுவேராவை படித்தேன்... "நேரமாச்சு போய் தூங்கு" என்று கண்டீத்தீர். நம் ஊருக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரி ஆட்சியருக்கு மனு செய்தேன்... "வேண்டாத வேலைய பாக்கதா" வெறுப்