நீர்வளம் மீட்பென்பது குளத்தில் குப்பை அகற்றும் பணியல்ல
நம் வீட்டுகளுக்கு யார் வந்தாலும் முதல் உபசரிப்பாக ஒரு குவளை நீரைக் கொடுப்போம். ஆனால் இன்று அந்த பண்பாடு தமிழக வீடுகளில் அற்றுப் போயிருக்கிறது. ஆதியில் வேட்டையாடி ஓடித் திரிந்த நம்மை பண்பட்ட உலகின் மூத்தகுடி சமூகமாக வளர்த்தது தமிழக ஆறுகள்தான். தாய்ப் போன்ற அந்த ஆறுகளுக்கு நாம் இன்று செய்து கொண்டிருக்கும் நன்றிக்கடன் என்னவென்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. உலகில் எல்லா ஆறுகளும் பண்பட்ட சமூதாயங்களையும் நாகரிகங்களையும் உருவாக்கிடவில்லை. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் உணவு உற்பத்தியில் மனிதன் ஈடுபடுவதற்குச் சில சாதகமான இயற்கைச் சூழல் தேவை. அதனால் தான் நீர்வளம் மிகுந்த அமேசான், மிசிசிபி, கங்கை போன்ற ஆற்றங்கரை பகுதியில் கி.மு. 1000 ஆண்டில்தான் வேளாண்மை தொடங்கியது. தமிழர்களின் வேளாண்மை பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே துவங்கிவிட்டது. ஆற்றில் குளித்து, குடித்து, ஆற்றில் தூண்டில் போட்டு மீன்பிடித்து, ஆற்றில் துணி துவைத்து, இக்கரையில் இருந்து அக்கரை செல்ல ஆற்றில் இறங்கி கடந்து சென்ற தலைமுறைகள் இப்போது ஓய்வு நாற்காலியில் சாய்ந்திருப்பார்கள் என்று நினைக்கிறன். அப்போது ஆறுகள் மக்களிடம் இருந்தது. இப