உழவர்களைத் தேடி - வத்திராயிருப்பு
ஒளிப்படங்கள் - திரு. மு.பிரசன்னா & திரு. இ.சுதாகரன் மதிப்புக்குரிய திரு. ச.முகேஷ், திரு. ப.பிச்சைமுருகன், திருமதி. இரா.செந்தமிழ் செல்வி, திரு. ந.கோபாலகிருஷ்ணன், திரு. நா.பெருமாள், திரு. கா.கருணாகரன், திரு. பா.சதாசிவராஜா, திரு. வே.இசைமணி, திரு.கு.மணி, திரு. பா.தமிழ்மணி, திரு. மு.தமிழ்செல்வன், திரு.கீர்த்திராஜன் இவர்கள் எல்லாம் யார் என்று கேட்குறீர்களா? நஞ்சை தூவி மண்ணையும் மண்ணுயிர்களையும் அடியோடு கொள்ளும் ஏகாதிபத்திய வேளாண் உற்பத்தி முறையின் அரசியலை புரிந்து கொண்டு, தாய் மண்ணை நேசித்து, பாரம்பரிய இயற்கை வழியில், புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி மண்ணை மீட்டெடுக்க அரும்பாடுபடும் பெருமக்களில் ஒரு சிறு கூட்டம். நஞ்சில்லாத உணவை நமக்கு வழங்க, இயற்கை வழி வேளாண்மையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் உழவர்கள். பசுமை போராளிகள். நாணல் நண்பர்கள் குழு ஒருங்கிணைக்கும் "உழவர்களைத் தேடி" யின் மூன்றாவது நிகழ்வு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு ஊரில் 18.05.2014, ஞாயிறு அன்று நடைபெற்றது. நீர் வற்றாத இருப்பு அதனால் வத்திராயிருப்பு என்று இவ்வூருக்கு பெயர் மருவியத