Posts

Showing posts from May, 2014

உழவர்களைத் தேடி - வத்திராயிருப்பு

Image
ஒளிப்படங்கள் - திரு. மு.பிரசன்னா & திரு. இ.சுதாகரன் மதிப்புக்குரிய திரு. ச.முகேஷ், திரு. ப.பிச்சைமுருகன், திருமதி. இரா.செந்தமிழ் செல்வி, திரு. ந.கோபாலகிருஷ்ணன், திரு. நா.பெருமாள், திரு. கா.கருணாகரன், திரு. பா.சதாசிவராஜா, திரு. வே.இசைமணி, திரு.கு.மணி, திரு. பா.தமிழ்மணி, திரு. மு.தமிழ்செல்வன், திரு.கீர்த்திராஜன் இவர்கள் எல்லாம் யார் என்று கேட்குறீர்களா? நஞ்சை தூவி மண்ணையும் மண்ணுயிர்களையும் அடியோடு கொள்ளும் ஏகாதிபத்திய வேளாண் உற்பத்தி முறையின் அரசியலை புரிந்து கொண்டு, தாய் மண்ணை நேசித்து, பாரம்பரிய இயற்கை வழியில், புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி மண்ணை மீட்டெடுக்க அரும்பாடுபடும்  பெருமக்களில் ஒரு சிறு கூட்டம்.   நஞ்சில்லாத உணவை நமக்கு வழங்க, இயற்கை வழி வேளாண்மையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் உழவர்கள். பசுமை போராளிகள். நாணல் நண்பர்கள் குழு ஒருங்கிணைக்கும் "உழவர்களைத் தேடி" யின் மூன்றாவது நிகழ்வு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு ஊரில் 18.05.2014, ஞாயிறு அன்று நடைபெற்றது. நீர் வற்றாத இருப்பு அதனால் வத்திராயிருப்பு என்று இவ்வூருக்கு பெயர் மருவியத

சிவரக்கோட்டை - அழியும் பசுமை சூழல்

Image
இந்த கிரமத்த, கடைசியா ஒருதரம் பார்த்துக்கோங்க... மதுரையில் உள்ள அழகிய கிராமங்கள், பல்லுயிர் சூழல் அழிய போகிறது. கடைசியா ஒருதரம் பார்த்துக்கோங்க.  "மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை, கரிசல்காளம்பட்டி, சுவாமிமல்லம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 1478.71 ஏக்கர் விவசாய நிலங்களை சிப்காட்டிற்கு எடுக்கும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலங்கள் விவசாய நிலமாய் இல்லை என்ற அரசு நிர்வாக அதிகாரிகளின் கூற்றுகளை பல குழுக்கள் நேரடியாக கள ஆய்வு செய்து பொய் என்று நிரூபித்துள்ளன. கம்பு,வரகு, சோளம், பருத்தி, துவரை, மொச்சை, பச்சைப்பயிர், சுண்டல், ஓமம் போன்ற 30க்கும் மேற்பட்ட உணவுத்தானியப் பொருட்கள் தற்போதும் சாகுபடி செய்து வரும் இந்த பூமியில் நித்ய கல்யாணி, அவுரி போன்ற மூலிகைப் பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. கரிசல்காளம்பட்டியில் சிவரக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 1 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு அவரி மானியம், தேசிய மூலிகை பயிர் இயக்கம், மாவட்ட இயக்குநர் மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது

வெள்ளிமலைக் காடு - ஒரு அறிமுகம்

Image
இந்திய பசுமை வேலி ஒரு பார்வை: மதுரையின் காடுகள் இயற்கை அமைப்பு பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் நம் இந்தியாவின் பசுமை பரப்பு பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வோம். படித்த மற்றும் களத்தில் திரட்டிய தகவல்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். நாணல் வெளியிட்டிருக்கும் இந்த கட்டுரை இந்திய வனம், காட்டுயிர் மற்றும் வெள்ளிமலை காடு குறித்த ஒரு தொடக்க நிலை அறிமுகத்தை உண்டாக்கும் என்று நம்புகிறோம். இந்திய மலைப் பகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கும் (66.7%), மொத்த பரப்பில் மூன்றில் ஒரு பங்கும் (33%) காடு இருக்க வேண்டும் என்பது நமது தேசிய வனக் கொள்கை (1988). 33 சதவீதம் இருக்க வேண்டிய காடுகள் இன்று இந்தியாவின் மொத்த நிலபரப்பில் 20 சதவீதம்தான் காடாக இருக்கிறது. எஞ்சியுள்ள அந்த 20 சதவீத காடுகளும் பெருமளவு துண்டாக்கப்பட்டு, வளமற்ற காடுகளாக உள்ளன என்பது நாம் கவலைப்பட வேண்டிய செய்தி. தமிழகத்தின் 1,30,058 சதுர கி.மீ மொத்த பரப்பில் 22,643 சதுர கி.மீ. மட்டுமே காடுகள் உள்ளன. அதாவது நிலபரப்பில் 15 சதவீதம். அதில் 3,305 சதுர கி.மீ. அதாவது வெறும் 2.5 சதவீதம் மட்டுமே பாதுகாக்கப்பட்ட காடுகளாக உள்ளது.

சிறுமலை ஒரு பயணம்

Image
Add caption காட்டெருமை, செந்நாய், மான், கேளையாடு, கரடி, முள்ளம்பன்றி, நரி, குரங்கு, சாம்பல் அணில், கீரி, பாம்பு, உடும்பு, ஆந்தை, கழுகு, பட்டாம்பூச்சிகள், தனக்கு, உசில், மருத மரம் என பல்லுயிர் பெருகிகிடக்கும் பசுஞ்சோலை சிறுமலைக் காடு. கடல் மட்டத்தில் இருந்து 1600 கி.மீ. உயரத்தில் அமைந்துள்ள சிறுமலையில் இரண்டு ஆறுகள் உற்பத்தியாகிறது. ஒன்று திண்டுக்கல் நோக்கி பாயும் சந்தானவர்த்தினி ஆறு. மற்றொன்று மதுரையை வாழ வைக்கும் சாத்தையாறு. ஆக சிறுமலைகாடு உயிர்ப்போடு இருந்தால்தான் மதுரை மற்றும் திண்டுக்கல் மக்கள் உயிர் வாழ முடியும். கோவை போன்ற நம் பிற நகரங்களில் பரவியுள்ள காடு குறித்த விழிப்புணர்வு மதுரை மக்களிடமும் ஏற்ப்பட வேண்டும். வறண்ட நிலமாகிப் போன மதுரையில் பல்லுயிர் பெருகி செழித்திருக்கும் காடுகள் இருக்கிறதா? என்று பலருக்கு வியப்பாக இருக்கும். அமெரிக்க நாட்டின் சிறப்புகளை அறிந்து வைத்திருப்பதா அறிவு? நம் ஊரின் பண்பாடு,  பெருமை, சிறப்பு, வளம் பற்றிய தெளிவான புரிதல்தானே உண்மையான அறிவு. ஒளிப்படம் - திரு.ந. இரவீந்திரன் சிறுமலை என்றால் பலர் திண்டுக்கல் மாவட்டத்த

மழையில் நனையும் மதுரையின் கவனத்திற்கு

Image
எதிர்பாராத விதமாக இந்த கோடை காலத்தில் கொட்டி தீர்க்கிறது மழை. இன்று (30.4.2014) பெய்த மழையால் மதுரை வலைவீசி தெப்பம் நிறைந்திருக்கனும், கிருஷ்ணராயர் தெப்பம் நிறைந்திருக்கனும், சம்பக்குளம் ஊரணி நிறைந்திருக்கனும். ஆனால் மதுரையின் சாபக்கேடு வலைவீசி தெப்பம் பெரியார் பேருந்து நிலையமாகவ ும், கிருஷ்ணராயர் தெப்பம் ஞாயிறு சந்தையாகவும், சம்பக்குளம் ஊரணி காவல்த்துறை கண்காணிப்பாளர் அலுவலகமாகவும் மாறி நெடுநாள் ஆகிவிட்டது. மாவட்ட நீதிமன்றம் எங்கே இருக்கிறது? செங்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரை மாநகராட்சி அலுவலகம் எங்கே இருக்கிறது? தல்லாகுளம் கண்மாயில் இருக்கிறது. இப்போ சொல்லுங்க.. தண்ணீருக்கு தெரு தெருவாக அலைகிற நாம எங்கே இருக்கிறோம்? வேறெங்கே நடு ரோட்டில் இருக்கிறோம். இப்படியாக நாம் இழந்த நீர்நிலைகள் மதுரையில் மட்டும் 20துக்கும் அதிகம். அதன் விளைவு நிலத்தடி நீர் 1000 அடிக்கும் கீழாக சென்றுவிட்டது. மாதம் ரூபாய் 1000 முதல் 3000 வரை தண்ணீருக்கே செலவழிக்க வேண்டிய பொருளாதார நெருக்கடியில் உள்ளது நடுத்தர குடும்பங்கள். தண்ணீருக்கு பணம் செலவழிக்க இயலாத குடும்பங்கள் ஊரை காலி செய்ய வேண்ட