உழவர்களைத் தேடி - ஏன்?
ஒளிப்படங்கள் - திரு. பாடுவாசி |
1. இயற்கை வழி வேளாண்மை கருத்தியல்களை மதுரையின் ஒவ்வொரு உழவர்களிடமும் கொண்டு சேர்க்க,
2. இயற்கை வேளாண் பயிற்சி முகாம்களை நடத்தி, இயற்கை வழி வேளாண்மையை பரவுபட்ட வேளாண் முறையாக மாற்ற,
3. ஒட்டு மொத்த உழவர்களுக்கு மத்தியில் இயற்கை வழி வேளாண்மையில் ஈடுப்படும் இயற்கை உழவர்களை தனியாக அடையாளபடுத்த,
4. இயற்கை உழவர்களை கௌரவிப்பதன் மூலம் அவர்களுக்கான சமூக அங்கீகாரத்தை உயர்த்த,
5. இயற்கை வேளாண்மைதான் ஆகச் சிறந்த உற்பத்தி முறை என்பதை உழவர்கள் மத்தியில் முன்னிறுத்த,
6. ஏகதிபத்திய அரசு கொணர்ந்த பசுமை புரட்சியின் கோர முகத்திரையை கிழித்தெறிய,
7. கடன்பட்டு சாகும் உழவர்களுக்கு செலவில்லாத வேளாண் முறை நமது பாரம்பரிய இயற்கை வேளாண்மை என்பதை பறைசாற்ற,
8. இரசாயன வேளாண் உற்பத்தி உணவு பொருட்களின் கொடிய நச்சு விசத்தை, மக்களுக்கும் உழவர்களுக்கும் படம்பிடித்து காட்ட
9. நஞ்சில்லா உணவை ஒவ்வொரு மனிதனும் உட்கொள்ள, ஆரோக்கியமான சமூகத்தை படைக்க,
10. தலைவர்களை கொண்டாடி பழக்கப்பட்ட நம் சமூகத்திற்கு உழவர்களை கொண்டாட ஒரு தளத்தை உருவாக்க,
11. பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய வேளாண்மையை விழுங்குவதற்க்குள் உழவர்களின் உரிமையாக வேளாண்மையை மாற்ற,
12. இயற்கை உழவர்களை ஒரு அணியில் திரட்டி, அரசியல்படுத்தி ஒரு அமைப்பாக உருவாக்க,
13. வேளாண் கொள்கை மற்றும் அரசியல் மாற்றத்திற்கு அவ்வமைப்பை கொண்டு முன் நகர்த்த என "உழவர்களைத் தேடி" நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு கிராமங்களிலும் பணியாற்ற வேண்டிய மிகப்பெரும் பொறுப்பை கையில் எடுத்து இருக்கிறது" என்றார்.
ஒளிப்படங்கள் - திரு. பாடுவாசி |
ஒளிப்படங்கள் - திரு. பாடுவாசி |
ஒளிப்படங்கள் - திரு. பாடுவாசி |
சந்தைபடுத்துதல் குறித்து திரு. காளிமுத்து அவர்கள் பேசினார். மேடையேறிய 11 உழவர்களும் இயற்கை வேளாண்மை பக்கம் திரும்ப அரும்பாடுபட்டவர். துடிப்புமிக்க் இளைஞரான திரு.காளிமுத்து ஒவ்வொரு கிராமங்களிலும் கூட்டம் நடத்தி, பயிற்சி வகுப்பு நடத்தி, உழவர்களை இயற்கை வேளாண் நோக்கி திருப்பும் அரும்பணியை நீண்ட நாட்களாக செய்து வருகிறார்.
"உயிரோசை" இதழ் சூன் 2014 |
தினசரி நாம் உண்ணுகிற உணவில் 15 விதமான இரசாயன நச்சு பொருட்கள் உள்ளது. அதில் 12 விதமான நச்சு பொருட்கள் உலக அளவில் தடை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர் கு.சிவராமன் குறிப்பிடுகிறார். அப்பேற்பட்ட ஈவிரக்கமற்ற தாக்குதலை உணவு வழியாக உலக நாடுகள் நம்மை அனுதினம் தாக்கி கொண்டே இருக்கிறது. நாம் தாக்கபடுகிறோம் என்பது கூட தெரியாமல் சுற்றி வருகிறோம். அவனுடைய முதல் இலக்கு இந்த தேசத்தின் உழவனும் உழவும்தான். இதை உணர்ந்து கொண்டு ஒவ்வொரு உழவனும் இயற்கை பக்கம் திரும்ப வேண்டும்.
இந்த உலக அரசியலை புரிந்து கொண்ட ஒரு சில விவசாயிகள் விவசாயத்தில் எவ்வளவு இழப்பு வந்தாலும் இனி என் மக்களுக்கு நஞ்சை நான் கொடுக்க மாட்டேன் என்று உறுதியேற்று இயற்கை பக்கம் திரும்புகின்றனர். பன்னாட்டு கொலை லாப வெறி நிறுவனங்களுக்கு எதிராக இயற்கை வழி வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களுக்கு ஆதரவாக நின்று, அவர்களை தேடிச் சென்று அவர்களின் சொந்த ஊரில் வைத்தே, மரியாதை செய்து கொண்டாடுகிற நிகழ்வுதான் "உழவர்களைத் தேடி".
நஞ்சில்லா உணவை நமக்களிக்கும் இயற்கை உழவர்களை கொண்டாடுவோம்.
தமிழ்தாசன்
நாணல் நண்பர்கள் குழு
நாணல் நண்பர்கள் குழு
9543663443
Comments
Post a Comment