என் கவிதைகள்....

உச்சி முகர
ஒரு முத்தம் வைக்க
கையில் எடுத்த கொஞ்சிட
குட்டி மூக்கென குறை கூறிட
அப்பனை போல் இருக்கிறது என்று
அடித்து சொல்லிட
ஆள் இல்லாத
அனாதை குழந்தையைபோல்
கவனிப்பாரற்று
கவலைக்கிடமாக கிடக்கிறது
என் கவிதைகள்....

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?