இந்த இதமான மண்ணை , ஆகாயத்தினை எப்படி வாங்கோ விற்கவோ முடியும் ? இது உண்மையில் எங்களிற்கு வியப்பாக உள்ளது. இந்த இதமான காற்றும் , மின்னித்தெறிக்கின்ற நீரும் எங்களிற்கு மட்டும் சொந்தமில்லை. எங்களிற்கு மட்டும் சொந்தமில்லாத ஒன்றை எவ்வாறு நாங்கள் விற்கமுடியும். எமது நிலத்தின் ஒவ்வொரு பகுதியும் எமது மக்களால் புனிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மண் புனிதமானது. எமது முன்னோர்களின் ஒப்புயர்வற்ற தியாகத்தாலும் , உழைப்பாலும் எமக்கு வழங்கப்பட்டது. இங்குள்ள ஆறுகளில் ஓடுகின்ற நீர் வெறும் நீரல்ல எமது முன்னோர்களின் குருதி. நாங்கள் இந்த நிலங்களை உங்களிற்கு (அமெரிக்க வெள்ளையர்களுக்கு) விற்றால் இந்த மண்ணின் புனித தன்மையினை நீங்கள் உங்கள் குழந்தைகளிற்கு கற்பிக்க வேண்டும். இங்கு ஓடுகின்ற ஆறுகளிலுள்ள நீர் எமது முன்னோர்களின் ஞாபகங்களை சுமந்த வண்ணமே செல்கின்றன. இந்த ஓடும் நீரின் ஓசை எமது பாட்டனாரின் குரல். இந்த ஆறுகள் எமது சகோதரர்கள் , இவைகள் எமது தாகத்தினை தீர்கின்றன. இந்த ஆறுகளிலே எமது வள்ளங்கள் சுமக்கப்படுகின்றன. எமது குழந்தைகளிற்கு நீரினை வழங்குவதும் இவைகளே. இப்படிப்பட நிலத்தினை நாங்கள் உங்களிற்கு தந்த...
மனிதகுலம் இன்று பல்வேறு இனங்களாகவும் பல ஆயிரம் தேசிய இனங்களாகவும், பல பத்தாயிரங்களுக்கும் மேற்பட்ட சமூகங்களாகவும் வேறுபாட்டுக்கு காணப்படுகின்றன. இதில் மிக தொன்மையாக விளங்குபவர்கள் பழங்குடி மக்கள். இவர்களின் சமூகங்களும் பண்பாடுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. பழங்குடிகள் பெரும்பாலும் அரசு அமைப்பற்ற தனித்த கட்டுக்கோப்பான சமூகம், தனித்த மொழி , பண்பாடு, வாழிடம், வாழ்க்கை முறை, சமயம் போன்றவற்றை கொண்ட ஒரு குடியாக இருப்பதை காண முடியும். மனித குலத்தின் தொல் சமூக பண்பாட்டில் பல படி நிலை வளர்ச்சிகளை அறிவதற்கு இன்று சான்றாக விளங்குபவர்கள் பழங்குடிகளே. மனிதகுலம் அடைய விரும்பும் மிக உயர்ந்த சமூக விழுமியங்களும் மேலைச் சமூகத்தார் வளர்த்துக் கொண்டதாக எண்ணும் விழுமியங்களும் இந்தியாவில் பழங்குடிகளிடம் பெரிதும் காணப்படுகின்றன. சாதி படிநிலையற்ற சமூகம், ஆண்-பெண் பாலின உறவில் சமத்துவம், ஆணாதிக்கம் குறைந்த சமூக வாழ்வு, காதலித்தோ, விரும்பியோ திருமணம் செய்து கொள்ளுதல், தனிமனித சுதந்திரம், தன்னியல்பு போக்கும் மிகுதியாக கொண்டிருத்தல் போன்ற பல உகந்த கூறுகள் பழங்குடிகளின் பண்பாட்டில் வளர்ந்துள்ளன. இந்த...
திருப்பரங்குன்றம் மலை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் பகுதியில் அமைந்துள்ளது திருப்பரங்குன்றம் மலை. சுமார் 170 ஏக்கர் பரப்பளவும் 3 கி.மீ சுற்றளவும், 1050 அடி உயரமும் கொண்ட அனற்பாறைகளிலான (Igneous Rock) குன்றாகும். அட்சரேகை, தீர்க்கரேகை 9.877188, 78.069965 என்கிற குறியீட்டு அச்சுதூராங்களில் மதுரை நகரில் இருந்து சுமார் கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருப்பரங்குன்றம் மலை. திருப்பரங்குன்றம் மலையின் வடக்குப்புறத்தில் தென்கால் கண்மாய், வடகிழக்கில் திருக்கூடல் மலை, கிழக்கில் தியாகர்யார் பள்ளி வளாகம், மேற்கில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையம், தென்மேற்கில் பானாங்குளம், தெற்கில் செவ்வந்திக்குளம், ஆரியங்குளம் கண்மாய், பறையன்மலை ஆகியவை எல்லைகளாக அமைந்துள்ளன. பரம் என்றால் உயர்ந்தது. குன்றம் என்றால் மலை. உயர்ந்தமலை என்னும் பொருளில் திருப்பரங்குன்றம் என்று பெயர் பெற்று இருக்கலாம். புராணங்கள் இம்மலைக்கான வெவ்வேறு காரணங்களை முன் வைக்கின்றனர். முருகப் பெருமானின் படை வீடுகளுள் முதற்படை வீடாக விளங்குவது திருப்பரங்குன்றம...
Comments
Post a Comment