பிணை கைதிகளாய் பிணங்கள்

-----பிணை கைதிகளாய் பிணங்கள்---

எங்கள் ஊரில்
மளிகை கடைகளை விட
மருத்துவமனைகளின் எண்ணிக்கை
ஐந்து மடங்கு அதிகரித்துவிட்டது.

அதில் சில
நோயாளிகள் இல்லாமல்
ஈ-யாடுகிறது.

சில
ஊசிகள் மூலம் புது நோய்களை
உட்செலுத்துகிறது...

பாவம்
எங்கள் ஊர்
வெட்டியானுக்குதான்
வேலையில்லாமல் போய்விட்டது...

பல மருத்துவமனைகள்
பணம் கொடுத்தால்தான்
பிணம் தருவோம் என்று
பிடிவாதமாய் சொல்லிவிடுவதால்.....

---தமிழ்தாசன்----

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?