மரணதண்டனை ?


‎---- மரணதண்டனை ? ----

பலிக்கு பலி வாங்க
படுகொலை செய்து
ஒரு யுகம்
மனம் வருந்தி
குணம் திருந்தி
சிறைக்குள் சித்தம் வளர்த்து
விழித்த மிருகம் அழித்து
மீதமுள்ள நாட்களிலேனும்
மிதவாதியாக இருக்க
விரும்பும் எனக்கு......

விடிந்தால் தூக்கு.

--- தமிழ்தாசன் ----

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?