சாதி மதமொழிந்திட சட்ட மெய்திட வேண்டும். நீதிமான்கள் பகுத்தறிவில் திட்டம் செய்திட வேண்டும் - மக்கள் ஏசிப் பழித்த வேசிமகன் ஆட்சி அமைத்திட வேண்டும் - எங்கள் பிரிவினை யகற்ற அனாதையொருவள் அரியணை ஏறிட வேண்டும்.
இந்த இதமான மண்ணை , ஆகாயத்தினை எப்படி வாங்கோ விற்கவோ முடியும் ? இது உண்மையில் எங்களிற்கு வியப்பாக உள்ளது. இந்த இதமான காற்றும் , மின்னித்தெறிக்கின்ற நீரும் எங்களிற்கு மட்டும் சொந்தமில்லை. எங்களிற்கு மட்டும் சொந்தமில்லாத ஒன்றை எவ்வாறு நாங்கள் விற்கமுடியும். எமது நிலத்தின் ஒவ்வொரு பகுதியும் எமது மக்களால் புனிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மண் புனிதமானது. எமது முன்னோர்களின் ஒப்புயர்வற்ற தியாகத்தாலும் , உழைப்பாலும் எமக்கு வழங்கப்பட்டது. இங்குள்ள ஆறுகளில் ஓடுகின்ற நீர் வெறும் நீரல்ல எமது முன்னோர்களின் குருதி. நாங்கள் இந்த நிலங்களை உங்களிற்கு (அமெரிக்க வெள்ளையர்களுக்கு) விற்றால் இந்த மண்ணின் புனித தன்மையினை நீங்கள் உங்கள் குழந்தைகளிற்கு கற்பிக்க வேண்டும். இங்கு ஓடுகின்ற ஆறுகளிலுள்ள நீர் எமது முன்னோர்களின் ஞாபகங்களை சுமந்த வண்ணமே செல்கின்றன. இந்த ஓடும் நீரின் ஓசை எமது பாட்டனாரின் குரல். இந்த ஆறுகள் எமது சகோதரர்கள் , இவைகள் எமது தாகத்தினை தீர்கின்றன. இந்த ஆறுகளிலே எமது வள்ளங்கள் சுமக்கப்படுகின்றன. எமது குழந்தைகளிற்கு நீரினை வழங்குவதும் இவைகளே. இப்படிப்பட நிலத்தினை நாங்கள் உங்களிற்கு தந்த...
மனிதகுலம் இன்று பல்வேறு இனங்களாகவும் பல ஆயிரம் தேசிய இனங்களாகவும், பல பத்தாயிரங்களுக்கும் மேற்பட்ட சமூகங்களாகவும் வேறுபாட்டுக்கு காணப்படுகின்றன. இதில் மிக தொன்மையாக விளங்குபவர்கள் பழங்குடி மக்கள். இவர்களின் சமூகங்களும் பண்பாடுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. பழங்குடிகள் பெரும்பாலும் அரசு அமைப்பற்ற தனித்த கட்டுக்கோப்பான சமூகம், தனித்த மொழி , பண்பாடு, வாழிடம், வாழ்க்கை முறை, சமயம் போன்றவற்றை கொண்ட ஒரு குடியாக இருப்பதை காண முடியும். மனித குலத்தின் தொல் சமூக பண்பாட்டில் பல படி நிலை வளர்ச்சிகளை அறிவதற்கு இன்று சான்றாக விளங்குபவர்கள் பழங்குடிகளே. மனிதகுலம் அடைய விரும்பும் மிக உயர்ந்த சமூக விழுமியங்களும் மேலைச் சமூகத்தார் வளர்த்துக் கொண்டதாக எண்ணும் விழுமியங்களும் இந்தியாவில் பழங்குடிகளிடம் பெரிதும் காணப்படுகின்றன. சாதி படிநிலையற்ற சமூகம், ஆண்-பெண் பாலின உறவில் சமத்துவம், ஆணாதிக்கம் குறைந்த சமூக வாழ்வு, காதலித்தோ, விரும்பியோ திருமணம் செய்து கொள்ளுதல், தனிமனித சுதந்திரம், தன்னியல்பு போக்கும் மிகுதியாக கொண்டிருத்தல் போன்ற பல உகந்த கூறுகள் பழங்குடிகளின் பண்பாட்டில் வளர்ந்துள்ளன. இந்த...
தமிழரின் தொன்மை சின்னங்களும் டங்ஸ்டன் சுரங்கமும் மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அ. வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், எட்டிமங்கலம் உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய 2015 ஹெக்டேர் அதாவது சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பை ஸ்டெர்லைட் புகழ் வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஸிங் நிறுவனம் (Hindustan Zinc) டங்ஸ்டன் (Tungsten) கனிமம் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை எடுத்து இருக்கிறது. மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு ஆய்வுடன் இணைந்த சுரங்க குத்தகை உரிமம் வழங்குவதற்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி, மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை வெளியிட்டது. கடந்த 07.11.2024 அன்று சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு & ஒழுங்குமுறை சட்டத்தின் (Mines and Minerals Development and Regulation Act 1957) கீழ் நடத்தப்பட்ட நான்காவது ஏலத்தில் மதுரை மேலூர் நாயக்கர்பட்டி பகுதி டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தை இந்துஸ்தான் ஜிங்க் (Hindustan Zinc Limited) நிறுவனம் எடுத்துள்ளது. ஒன்றிய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த ஏலம் நடைபெற்றுள்ளது. தமிழ்ந...
Comments
Post a Comment