எது கடவுள் பக்தி


---- எது கடவுள் பக்தி ? ----

இக்கட்டான நேரங்களின் இறுதியில்
இதய பிடிமானம் இழந்து,
" இனி இறைவன் பார்த்துகொள்வான் " என்று
இருக்கைகள் கூப்பி
இருபத்திநாலு மணி நேரமும்
இறைவனை
இடைவெளியின்றி துதிப்பது அல்ல
ஆன்மிகம்.

தளராமல் போராடி
ஒருபோதும் பின்வாங்காமல்
ஒருவனாக தனித்து நின்று,
முடியாத செயல் ஒன்றை
முடித்து,
சாதனை நிகழ்த்தி
" எல்லாம் இறைவன் செயல் " என்று
புன்சிரிப்போடு மனசுக்குள்
புலம்புவதுதான்
உண்மையான ஆன்மிகம்.

---தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?