உன்னை கண்ட பின்தான் கல்லறை எனக்கு

----உன்னை கண்ட பின்தான் கல்லறை எனக்கு----

உனக்கென வெகுநாள்
என் கால் விரல்கள்
வேர்பிடிக்க
காதலோடு காத்திருந்த
காட்டு வழி பாதையிலே..

புயலொன்று கடந்து சென்றதடி.

அடியோடு ஆங்காங்கே
ஆழமரமும் அசைந்தாடி
விழுந்ததடி.

தனிமையில்
தவிக்கவிடும் - என்
தாவனி இளங்கோடியே!
தள்ளாடி நான் மட்டும்
தனி மரமாய் நின்றுவிட்டேன்.

எலியும் ஒலி எழுப்பினால்
எதிரொலிக்கும் மலைப் பிரதேசத்தில்
மௌனம் காக்கும் - என்
மன சுந்தரியே!

சூறாவளியே வருமாயினும்
நினை காணாமல் - என்
சுருட்டை முடிக் கூட
மண்ணில்
சுருண்டு விழாதடி.....

----தமிழ்தாசன்----

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?