மூட்டைப்பூச்சியாகி விட்டது
- Get link
- X
- Other Apps
கற்பனைகளை விற்பனை செய்து
கடினமாய் ஒரு கவிதை
கடிதமாய் எழுதிவந்தேன்.
தங்க தமிழே வந்து
தாலாட்டு பாடும் - அந்த
தாவணி மயிலிடம்
தலைகணத்தோடு நான் எழுதிய
கவிதையை காண்பிக்க...
கடினமாய் ஒரு கவிதை
கடிதமாய் எழுதி வந்தேன்.
அவள்
வாயிலிருந்து வழுக்கி விழும்
வார்த்தைகள் கூட - நான்
வலிய எழுதிய
வரிகளில் இல்லை.
வழக்கம் போல்
முழக்கமிடும்
முத்தமிழையும்
முதுகில்
யானைப் போல் சுமந்த வந்த
என் கவிதைகள்..
முனங்கி முனங்கி
ஒரு
மூட்டைப்பூச்சியாகி விட்டது
அவள்முன்......
----தமிழ்தாசன்----
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment