பெண்ணியம்


---- பெண்ணியம் ----

கருவேல காட்டு பொந்துக்குள்
ஈன்ற ஐந்து குட்டிகளில்
மூன்று காணவில்லை.
எஞ்சியிருக்கும் இரண்டு
என்ன பாலினம் என்பது
உங்களுக்கு தெரியும்.
பெண் நாய் குட்டியை
பிரியத்தோடு எடுத்து வளர்க்கும்
பெரிய மனசு
எத்தனை பேருக்கு
வாய்த்திருக்கும்?

கள்ளி பால் கொடுக்கும்
சிறுபுத்தி
நாய்களுக்கு இருப்பதில்லை.


--- தமிழ்தாசன்----

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?