தோழர் செங்கொடி

----- தோழர் செங்கொடி -------

நாங்கள் 
இயற்றி போராட்டத்தின் 
இயலாமையை புரியவைத்தவள் 
எங்கடி ?
அவளெங்கள் பிரபஞ்சத்தில்
எரியும் அணையா கங்கடி.

தமிழுயிர்
ஊற்றி விளக்கேற்றிய
செங்கொடி.

நிரபராதி தமிழர்க்கு
நீதி கேட்க வந்த
எம்பாரதி நெருப்பே !

அகராதி பக்கங்கள்
அச்சிட்டதுன்னை
தமிழ்ரத்த கொதிப்பே !

உறக்கமற்ற எமனோடு
மல்லுக்கு போயிருந்தால்
உறுதியாக ஒருநாளில்
விடிவும் பிறந்திருக்கும்
முடிவு தெரிஞ்சிருக்கும்.

இரக்கமற்ற விலங்கு
சொல்லுக்கு காத்திருந்தால
எங்க
வயித்திலடி விழுந்திருச்சு - ஒரு
தொப்புள் கொடி கருகிருச்சு.

காஞ்சிபுர தறிகலேல்லாம்
தறிகெட்டு நிற்பதென்ன ?

காமாட்சி வடிவிலோருத்தீ
எரியூட்ட பட்டதென்ன?

தூக்கு கயிறை அறுத்தெறிய
நினக்கு நல்ல நிழல்
தேக்கு மர
சாம்பல் வேண்டுமோ ?

தமிழ்த்தாயே !
மாய்க்கும் உயிரை
மறுமுறை பிரசவிக்க
எமக்கொரு
கருவறை தாராயோ ?

---- தமிழ்தாசன்----
28.08.2012

(தோழர் செங்கொடி நினைவு நாள் இன்று )


Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?