Posts

Showing posts from June, 2025

கொட்டாம்பட்டி மலைகள்

Image
புறக்கூடுமலை, பொக்கிசமலை, வெள்ளூத்து மலை, பறையன்மலை, பச்சைநாச்சி மலை, பெரியமலை, மண்டபத்துமலை உள்ளிட்ட பல மலைக்குன்றுகள் மதுரையில் குவாரி பணிகளால் காணாமல் போயிருக்கிறது. கொண்டையம்பட்டி வண்ணாத்திக்கரடு, ராஜாக்கள்பட்டி சங்குச்சுனைமலை, சத்திரவெள்ளாளப்பட்டி பெருமலை என பல மலைகள் நம் கண்முன்னே இன்று வெட்டி அழிக்கப்படுகின்றது. பெருங்கற்கால பாறை ஓவியங்கள், சங்ககால தமிழிக் கல்வெட்டுகள், குடைவரைக் கோயில்கள், மன்னர்களின் கல்வெட்டுகள், புடைப்பு சிற்பங்கள், பல சமய வழிபாட்டு தளங்கள் என மதுரையின் வரலாற்று அடையாளங்களை இம்மலைகளும், குன்றுகளும் தான் தாங்கி நிற்கின்றன. இந்த ஆண்டின் துவக்கத்தில் தான் மதுரை கம்பூர் அருகே வீரக்குறிச்சி மலையில் 800 ஆண்டுகள் தொன்மையான மூன்று பிற்பாண்டியர்கள் கால கல்வெட்டுகள் கண்டறியப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்புதான் மதுரை புலிமலை மற்றும் கிழவிக்குளம் மலையில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டது. மதுரையில் உள்ள ஒவ்வொரு மலைகளும் குன்றுகளும் இன்னும் நாம் கண்டறியாத பல வரலாற்றை தன்னுள் வைத்துள்ளது. சிற்ப நகரம், கிரானைட் குவாரி, டங்ஸ்டன் சுரங்கத் திட...

திருமணிமுத்தாறு கரையோரக் கோயில்கள்

Image
ஆற்றூர் அருகே ஓடும் ஆறு எது? ----------------------------- கடந்த வாரம் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், எரிச்சி மலம்பட்டி அருகே உடன்பட்டி கிராமத்தில் உள்ள ஆத்தூர் கண்மாய்  சிதிலமடைந்த பழங்கால கோயில் ஒன்று இருப்பதாக அறிந்து, அவ்விடத்தில் உள்ள முட்புதர்களை நீக்கி, புதையுண்டு கிடந்த கோயில் தெரியும் வண்ணம் மணலை அகற்றி உள்ளூரைச் சேர்ந்த ரஞ்சித், பிரபு மற்றும் நண்பர்கள் இணைந்து கோயில் இருக்குமிடத்தை தூய்மை செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் சிற்பத்துறை ஆய்வாளர் தேவி, தொல்லியல் ஆய்வாளர் அறிவுச் செல்வம்‌ ஆகியோர் இந்த கோயிலை ஆய்வு செய்தனர். பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த உதயகுமார், முத்துப்பாண்டி, முருகன்‌ ஆகியோர் படி எடுத்தனர். இந்த கல்வெட்டை முழுவதுமாக வாசித்து அக்கல்வெட்டு விவரத்தை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அவர்கள் வழங்கினார்.  கல்வெட்டில் உள்ள செய்திகளின்படி  அக்கோயில் அமைந்த ஊரின் பெயர் ஆற்றூர் என்றும் கோயிலின் பெயர் தென்னவன் ஈஸ்வரம் என்றும் தெரிகிறது. தென்னவனீஸ்வரம் கோயிலை காண வேண்டுமென்கிற ஆவலில்   மலம்பட்டி ஊராட்சியில் உள்ள உடன்பட்டிக்கு செ...