Posts

Showing posts from January, 2025

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?

Image
திருப்பரங்குன்றம் மலை:       மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் பகுதியில் அமைந்துள்ளது திருப்பரங்குன்றம் மலை. சுமார் 170 ஏக்கர் பரப்பளவும் 3 கி.மீ சுற்றளவும், 1050 அடி உயரமும் கொண்ட அனற்பாறைகளிலான (Igneous Rock) குன்றாகும். அட்சரேகை, தீர்க்கரேகை 9.877188, 78.069965 என்கிற குறியீட்டு அச்சுதூராங்களில்  மதுரை நகரில் இருந்து சுமார் கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருப்பரங்குன்றம்   மலை.  திருப்பரங்குன்றம் மலையின் வடக்குப்புறத்தில் தென்கால் கண்மாய், வடகிழக்கில் திருக்கூடல் மலை, கிழக்கில் தியாகர்யார் பள்ளி வளாகம், மேற்கில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையம், தென்மேற்கில் பானாங்குளம், தெற்கில் செவ்வந்திக்குளம், ஆரியங்குளம்  கண்மாய், பறையன்மலை ஆகியவை எல்லைகளாக அமைந்துள்ளன. பரம் என்றால் உயர்ந்தது. குன்றம் என்றால் மலை. உயர்ந்தமலை என்னும் பொருளில் திருப்பரங்குன்றம் என்று பெயர் பெற்று இருக்கலாம். புராணங்கள் இம்மலைக்கான வெவ்வேறு காரணங்களை முன் வைக்கின்றனர். முருகப் பெருமானின் படை வீடுகளுள் முதற்படை வீடாக விளங்குவது திருப்பரங்குன்றம...

சோமகிரி மலை - பறம்பு நாடு

Image
பெருங்கற்கால சின்னங்கள், பிற்கால பாண்டியர் கல்வெட்டு,  விருப்பாச்சிராயர் கல்வெட்டு, சுல்தான் நாணயம்  சோமகிரி மலை: (உரல் கழுத்து பாறை) கோட்டை:  சுப்ரமணிய முருகன் கோயில்: பறம்பு கண்மாய்: மலைய பீர் தர்கா:  வாலா சாகிப் நகரம்:  கருப்பு கோயில்: கார்த்திகை தீபம்:  அழகுநாச்சியம்மன் கோயில் காடு:  முனியாண்டி கோயில்: பட்டாசாமி கோயில்: மேலவளவு படுகொலை:  பல்லுயிர்கள்: முறிமலை: தமிழ்நாட்டில் பெருங்கற்காலம் என்பது கிமு 1000 முதல் கிபி வரை 200 இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் ஈமக்குழிகளை பெரிய பெரிய கற்களை கொண்டு அமைத்ததன் அடிப்படையில் பெருங்கற்காலம் என அழைக்கப்பட்டது. முதுமக்கள் தாழி, கற்பதுக்கை, கற்திட்டை, நெடுங்கல், கல்வட்டம், கற்குவை என பல வகை பெருங்கற்கால சின்னங்கள் தமிழ்நாட்டில் காணப்படுகிறது. கற்திட்டை (Dolmen), கற்பதுக்கை (Cist), கல்வட்டம் (Stone Circle), நெடுங்கல் (Menhir) உள்ளிட்ட பெருங்கற்கால சின்னங்கள் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மேலவளவு ஊராட்சியில் உள்ள மேலவளவு, ராசினாம்பட்டி, கைலம்பட்டி ஆகிய ஊர்களில் 50 ஏக்கர் பர...