Posts

Showing posts from 2024

பால்குடி கிராமத்தில் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால சின்னங்கள்

Image
 பால்குடி கிராமத்தில் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால சின்னங்கள்  மதுரை மாவட்டம் மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கச்சிராயன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பால்குடி என்னும் கிராமத்தில் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால சின்னங்கள் ஆவணம் செய்யப்பட்டது. அருவிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பால்குடி கிராமம் பல வரலாற்று சிறப்புகளை கொண்டது. அருவிமலையின் உச்சியில் கிபி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபாண்டியர் கால சிவன் கோயில் காணப்படுகிறது. இக்கோயிலின் அதிட்டான பகுதி, இக்கோயில் அருகேயுள்ள பாறை,  கோயில் செல்லும் மலைப்பாதையில் உள்ள படிக்கட்டு, போன்றவற்றில் தமிழ்க் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டு விவரங்களை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை 2005 ஆம் ஆண்டு வெளியிட்ட மதுரை மாவட்டக் கல்வெட்டு தொகுதி (முதல் தொகுதி) நூலில் வெளிவந்துள்ளது. இங்குள்ள கல்வெட்டுக்களிலிருந்து இக்கோயில் எழுந்தருளியுள்ள இறைவனுக்குத் 'திருமேலழகிய பாண்டிய நாயனார், 'திருமேலாழி நாயனார்', 'திருமேலாழி அண்டார்', 'திருமேலாழியாண்ட நாயனார்' என்று பெயர்கள் வழங்கி வந்திருப்பதையும், ஊர்ப்பகுதிக்குப்...

டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்

Image
தமிழரின் தொன்மை சின்னங்களும்     டங்ஸ்டன் சுரங்கமும்           மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அ. வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், எட்டிமங்கலம் உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய 2015 ஹெக்டேர் அதாவது சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பை ஸ்டெர்லைட் புகழ் வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஸிங் நிறுவனம் (Hindustan Zinc) டங்ஸ்டன் (Tungsten) கனிமம் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை எடுத்து இருக்கிறது. மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு ஆய்வுடன் இணைந்த சுரங்க குத்தகை உரிமம் வழங்குவதற்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி, மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை வெளியிட்டது. கடந்த 07.11.2024 அன்று சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு & ஒழுங்குமுறை சட்டத்தின் (Mines and Minerals Development and Regulation Act 1957) கீழ் நடத்தப்பட்ட நான்காவது ஏலத்தில் மதுரை மேலூர் நாயக்கர்பட்டி பகுதி டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தை இந்துஸ்தான் ஜிங்க் (Hindustan Zinc Limited) நிறுவனம் எடுத்துள்ளது. ஒன்றிய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த ஏலம் நடைபெற்றுள்ளது. தமிழ்ந...